பக்கம் எண் :

166கவிமணியின் கவிதைகள்

Untitled Document
வேறு

1052 அண்ணா மலைக்கழகம் ஆளும் துணைவேந்தன்
தண்ணார் குணசீலன் சண்முகவேள் - விண்ணோர் போல்
வாடா மகிழ்ச்சி மலர்சூடி வாழ்ந்திடுக,
நீடாழி சூழும் நிலத்து.

143. முத்துசாமிப் பிள்ளை

1053 கண்டும் கனியும் களியமுதும் மாறிஉருக்
கொண்டும் கவியிற் குடிபுகுமோ? - தண்டமிழைப்
போற்றுமுத்து சாமிப்புலவ ! நம் மன் சரிதைக்கு
ஏற்றசுவை ஏற்றயவா றென்?

144. கே.ஆர். ராம்சிங்

1054 சீத மதிபுனைந்தோன் சிற்றம் பலக்கூத்தன்
நாதன் உமைபங்கன் நல்லருளால் - கோதிலா
நன்னடிகச் சிங்கமென நாடுபுகழ் ராமசிங்கம்
மன்னுலகில் வாழ்க மகிழ்ந்து.

145. தமிழரசி

1055 தந்தையொடு தாயும் தருமம் உளமகிழ
வந்த தமிழரசி வாழி நிதம் வாழி
கல்வி நன்கு கற்றுக் கற்றபடி நின்று
செல்வி தமிழரசி சிரஞ்சீவி யாய் வாழி
அமிர்த மொழிபேசி அறநெறியைப் பற்றித்
தமிழரசி யென்றும் தழைத்துலகில் வாழி

146. பாஸ்கரன்

1056 பைந்தமிழ்க் காலெலாம்
பரிமணித்திட - வந்தெழு
பாஸ்கரன் வாழி வாழியே