முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 167 |
Untitled Document
1057 | | தேவருமே இங்குவந்து செந்தமிழைக் கற்றினிய பாவலராய் வாழமனம் பற்றுவரே - பூவுலகில் வானுயரும் பாரதியார் மண்டபத்தை எட்டப்பன் மாநகரில் கண்டு மகிழ்ந்து. |
1058 | | பாரதத்தாய் செய்தவப் பயனாய் வந்த பாவலன் சுப்பிரமணிய பாரதிக்குச் சீருயரும் எட்டய புரத்திற் கண்ட திருக்கயிலை யனையமணி மண்டபத்தைப் பேருவகை தருசர்வ ஜித்தில் கன்னி பிறந்தஇரு பானேழில் திறந்து வைத்தான், தாரணியில் வங்கவள நாட்டை யாளும் சக்ரவர்த்தி ராஜகோ பால மாலே. |
1059 | | ஆல நிழலில் சற்குருவாய் அமர்ந்தபெருமான் திருவருளால் பால ராம புரமென்னும் பதியில் வைகும் இனியகுண சீலர் அடியர் அறம்பேணும் தெய்வ யோக சங்கத்தார் ஞால மீது தளராதெந் நாளும் வாழ்க வாழ்கவே! |
1060 | | நாமகளுக் காலயமாய் நற்கல்விச் சாலையுமாய் மாமகுடஞ் சாவடியில் வாழியவே - நேமமிகு நங்கை சகுந்தலையின் நன்னாமம் பெற்றுயர்ந்து தங்கும் தனிநிலையம் தான் | |
|
|