பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு17

Untitled Document
72.   பின்னும் பின்னும் எனைப் - பிறவிப்
     பிணியில் இடுவையேல்,
என்ன செய்வதெனத் - தினமும்
     எண்ணி நைவேனே.

14. போதனை

73.   உள்ள துணர வேண்டுமெனில்
     உள்ளம் தெளிய வேண்டுமப்பா!
கள்ளங் கபடா காதப்பா!
     கருணை பெருக வேண்டுமப்பா!
அள்ளி உண்ணும் உணவுக்காய்
     அருமை கெடலா காதப்பா!
எள்ளத் தனையும் மரணபயம்
     இல்லா திருக்க வேண்டுமப்பா!

74.   ஈச னிரங்கி அடியவருக்
     கினிய காட்சி யளித்திடுநாள்
ஈச னடியார் யாவுமறந்து
     ஈச னடியே கண்டிருப்பர்;
ஈச னடியைக் கண்டவர்பின்
     என்றும் மௌனம் கொண்டிருப்பர்
ஈச னடிகா ணாதவரே
     எங்கும் முழங்கி அலைந்திடுவர்.

75. என்றும் ஈசன் திருவடிகள்
     இதயக் கமலம் சேர்ப்பீரேல்,
என்றும் கருணை ததும்பியெழும்
     இனிய உரைகள் உரைப்பீரேல்,
என்றும் ஏழை எளியவருக்கு
     இயன்ற உதவி புரிவீரேல்,
என்றும் என்றும் இவ்வுலகில்
     இனிய வாழ்வு வாழ்வீரே!