Untitled Document 15. இராமகிருஷ்ண பரமஹம்ஸர் |
76. | | ஓடும் பொன்னும் ஒன்றெனவே உறுதி கண்ட உள்ளத்தான், ஏடும் குருவும் இல்லாமல் யாவும் அறிந்த பேரறிஞன், ஈடில் அருள்மா முனிவன்ஸ்ரீ இராம கிருஷ்ணன் திருநாமம் நாடும் நகரும் போற்றிடயெந் நாளும் வாழ்க வாழ்கவே! |
77. | | பார்தனிலே வேதாந்தப் பயிர்வ ளர்த்தோன். பத்தினியைச் சோதரியென் றெண்ணி வாழ்ந்தோன்; கூர்மதியால் எக்கலையும் தானே கற்றோன் குணக்குன்றாம் ராமகிருஷ்ணன் பரம ஹம்ஸன்; சீர்மிகுந்த மெய்ஞ்ஞானி தெரிந்து ரைத்த செம்மொழிகள் சிந்தையினிற் சேர்த்தோரென்றும் பேர்பெருக நீடிந்த உலகில் வாழ்ந்து பேரின்ப வாழ்வினையும் பெறுவர் மாதோ! |
78. | | பாரிலரும் புகழபுபடைத்த பரமஹம்ஸன், பாரதத்தாய் செய்ததவப் பயனாய் வந்தோன்; நீரொழியப் பாலுண்ணும் நெறியில் ஆய்ந்து, நிலையான உண்மைகளை நெஞ்சிற் கொண்டோன்; கூரியமா மதிவிவே கானந் தற்குக் கோதிலா மெய்ஞ்ஞான குருவாய் நின்றோன்; சீரியநம் ராமகிருஷ்ண தேவன் பாதம் சென்னிமிசைக் கொண்டுநிதம் சேவிப்போமே! |
79. | | வங்கம் அளித்தமகான் வையம் புகழுமான் தங்கக் குணங்குடியாய்த் தங்குமகான் - மங்கையரைத் தீண்டியறி யாதமகான் ஸ்ரீராம கிருஷ்ணனெனை ஆண்டருள்க, நெஞ்சில் அமர்ந்து! | |
|
|