முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 19 |
Untitled Document
80. | | வேதா கமங்கள் விரித்த பொருளையெலாம் ஓதா துணர்ந்த உரவோனை - மாதா என்று இத்தலத்து மங்கையர்கள் யாவரையும் காண்போனை நித்தமுமென் நெஞ்சே நினை. |
81. | | எங்கும் நிறைபொருளாய் எப்பொருட்கும் மேற்பொருளாய் தங்கும் தனிப் பொருளின் தண்ணருளால் - பொங்கு புகழ் மாதவன் ராமகிருஷ்ணன் வாய்மலர்ந்த பொன்மொழியெப் போதுமென் நெஞ்சேநீ போற்று. |
16. பரமஹம்ஸரின் தேவி பிரார்த்தனை |
82. | | உன்னரு ளல்லால் - வேறிங் கொருதுணை யுண்டோ? என்னை ஆண்டிடநீ - உள்ளம் இரங்க வேண்டுமம்மா! |
83. | | மாசிலாத அன்பு - நெஞ்சில் வளர வேண்டுமம்மா ஆசை வேரெல்லாம் - அடியோ டழிய வேண்டுமம்மா! |
84. | | உலக மாயையிலே - சிக்கி உழன்று நையாமல், அலகிலாத வுன்றன் - அருளால் ஆள வேண்டுமம்மா! |
85. | | பொருளும் வேண்டாமம்மா! - எனக்குப் புகழும் வேண்டாமம்மா! அருளே வேண்டுமம்மா! - வேறோர் ஆசை இல்லையம்மா! |
86. | | கோயில் என்னெஞ்சாய் - என்றும் குடியிருப்பா யம்மா! தாயின் அருளல்லால் - எனக்கோர் தஞ்சம் வேறுண்டோ? | |
|
|