பக்கம் எண் :

20கவிமணியின் கவிதைகள்

Untitled Document
87.   சித்திகள் பெற்றரிய - செயல்கள்
     செய்ய வேண்டாமம்மா!
பத்தியொ டுன்பாதம் - நிதமும்
     பணிதல் போதுமம்மா!

88.   மாசிலாத அன்பை - உன்னை
     மறக்க வொண்ணா அன்பை,
தாசனாகும் அன்பை - எனக்குத்
     தந்தருள்வா யம்மா!

89.   காமம் அண்டாமல் - என்னைக்
     காக்க வேண்டுமம்மா!
தீமை சாராமல் - உள்ளம்
     தெளி வேண்டுமம்மா!

90.   ஆன துணையிங்கே - பிள்ளைக்
     காரு மில்லையென,
நானுரை யாமல் - நீயே
     நன்க றிவாயம்மா;

91.   ஜம்புலச் சேட்டை - முற்றும்
     அடங்க வேண்டுமம்மா!
நம்பியுன் பதமே - உள்ளம்
     நாட வேண்டுமம்மா!

92.   ஏடு கண்டறியேன் - ஏட்டில்
     எழுத்தும் கற்றறியேன்;
பாடிப் பாடியுனைப் - போற்றிப்
     பணிவ தெப்படியோ?

93.   உண்மை அன்பில்லை - ஞான
     ஒளியும் நெஞ்சிலில்லை;
அண்மை யாகவந்துன் - பாதம்
     அடைவ தெப்படியோ?

94. மண்ணில் உன்பிள்ளை - தனியே
     வாடி நிற்பதை நீ
கண்ணி லெந்நாளும் - தாயே
     கண்டறியாயோ?