பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு21

Untitled Document
95.   மருளும் இவ்வுலகில் - ஏழை
     வருந்தி வாடாமல்
அருட் பெருங்கடலே - உண்மை
     அன்பளிப் பாயம்மா!

17. சாரதா தேவி

96.   சிந்தனையில் போற்றிடுவோம்; செந்தமிழில் பாடிடுவோம்;
வந்தனைகள் செய்து வணங்கிடுவோம் - முந்துபுகழ்ப்
பாரதத்தாய் பெற்றபெரும் பாக்கியத்தால் வந்துதித்த
சாரதத்தாய் வாசமலர்த் தாள்.

வேறு

97.   மண்ணில் வாழும் வாழ்நாளில்
     மாலை யிட்ட மணவாளன்
கண்ணிற் கண்ட கடவுளெனக்
     கருதி வாழ்ந்த மாதேவி
அண்ணல் ராம கிருஷ்ணாவின்
     அருமை மனைவி சாரதையை
பண்ணில் பாடிப் புகழ்வோம்!
     பாத பூசை செய்வோமே!

18. விவேகானந்தர்

98. சீர்பெருகு வங்கநிலம் சிறக்க வந்தோன்,
     ஸ்ரீ ராம கிருஷ்ணபதம் சிரமேற் கொண்டோன்;
பார்புகழும் வேதாந்தப் பயிர்வ ளர்த்தோன்;
     பாரதத்தின் பெருமையெங்கும் பரவச் செய்தோன்;
வேர் பறிய எதிர்வாதம் விரித்துக் கூறி,
     வீண்வாதம் செய்பவரை வென்று, வெற்றித்
தார்புனைந்த தவயோகி விவேகா னந்தன்
     தாள்பணிந்து வாழ்வோமித் தரணி மீதே.