பக்கம் எண் :

22கவிமணியின் கவிதைகள்

Untitled Document
19. இராமகீர்த்தரின் போதனை

99   ஓய்ந்து சோம்பி உறங்கா தேயடா!
     ஊக்கம் பெருக உழைத்துமுன்னேறடா!
வாய்ந்த தொழிலில் மலையா தேயடா!
     மனமதில் ஒன்றி மகிழ்ச்சி கொள்ளடா!

100   ஐயம் அடர்ந்துளம் அழியா தேயடா!
     அமைதி எந்நாளும் அடைந்திருப் பாயடா!
நையப் பிரித்து நலியா தேயடா!
     நாடி இணங்கி நல்லுருப் படுத்தடா!

101   மன்னிய மாமூல் வழுத்தியென் பயனடா!
     வாழ்நாட் கிசைய வாழ்வு வளரடா!
உன்னிப் பகட்டுரை உரைத்தென் பயனடா!
     உள்ளத் துணர்ச்சி ஊன்றி உணரடா!

102   கற்பனைக் குதிரை கடவுதல் ஒழியடா!
     காரியம் பொருளிற் கண்டு தெரியடா!
விற்பனர் விதிகளை விளம்புதல் வீணடா!
     வினையில் விளைந்த விவேகம் காணடா!

103 உயிரிலா மேற்கோள் உரைப்பதேனடா!
உற்றவாழ் வின்பயன் உணர்ந்திங் கெய்தடா!
வியனுல கத்தில் நலந்தரும் அனுபவ
வேதாந் தத்தின் மெய்பொருள் ஈதடா!

20. சுவாமி சிவானந்தா

104 அன்னையப்ப னாகி அனைத்துலகும் ஆள்கின்ற
தன்னந் தனிப்பெருமாள் தண்ணருளால் - மன்னுபுகழ்
சித்தன் திருஞானச் செல்வன் சிவானந்தன்
நித்தமும் வாழ்க நிலைத்து

105 எங்கும் நிறைபொருளாய் எப்பொருட்கும் மேற்பொருளாய்
தங்கும் தனிப் பொருளின் தண்ணருளால் பொங்குபுகழ்
ஐயன் சிவானந்தன் அன்புருவ மானமகான்
வையமிசை வாழ்க மகிழ்ந்து