பக்கம் எண் :

178கவிமணியின் கவிதைகள்

Untitled Document
வேறு

1109 நாடு புகழ் ராஜாஜி திருநா மத்தால்
     நன்னகராம் நெல்லை நகரம் தன்னில்
பீடுபெற அமையுமிந்தப் பிரசவ சாலை
     பேருலகில் வளர்ந்தோங்கி இனிதுவாழ
தேடுமொரு மங்கையர்க்கு தாயாய் வந்து
     சிந்தைமகிழ் மகப்பேறு பார்த்தஈசன்
தோடுடைய செவியன்விடை ஏறி வானத்
     தூவெண்பதி சூடிபதம் தொழுவோம் யாமே.

170. அண்ணாமலை பல்கலைக்கழகம்

1110 பத்திமிகுந் தன்பர் பணியும் திருத்தில்லை
அத்திமுகத் தண்ணல் அருளாலே - தத்துதினா
ஆழிசூ ழிப்புவியில் அண்ணா மலைக்கழகம்
வாழியரோ வாழி வளர்ந்து

1111 செய்ய தமிழும் ஆரியமும்
     சிறந்த கலைகள் பற்பலவும்
தையல் பாகன் தண்ணருளால்
     தழைத்து வளரத் தில்லையிலே
ஐயன் அண்ணா மலைமன்னன்
     அமைத்த கழகம் இமையம்போல்
வைய மீது புகழோங்கி
     வாழ்க வாழ்க வாழ்கவே.

1112 அள்ளற் பழனம் சூழ்தில்லை
     அணிமா நகரில் அரியகொடை
வள்ளல் அண்ணா மலைமன்னர்
     வளர அமைந்த கலைக்கழகம்
வெள்ளி விழாப்போல் வேறுபல
     விழாக்கள் கண்ட வேல்முருகன்
புள்ளி மயில்வா கனன்அருளால்
     புவியில் வாழ்க வாழ்கவே.