முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 179 |
Untitled Document | | பத்திரிகை வாழ்த்து (11) | | | 171. சக்தி | 1113 | | சித்தம் மகிழ்ந்துநம் செந்தமிழ்த்தாய் வந்திந்தச் சத்திவடி விற்காட்சி தந்தனளால் - பத்தியொடு நித்தமும் அன்பு நிலையத்தார் செய்துதரும் புத்தணிகள் பூணும் பொருட்டு. |
1114 | | கல்வி வளரக் கலைவளர நாடெங்கும் செல்வம் வளரத் திருவளர - நல்வழிசேர் புத்தி வளரப் புகழ்வளரத் தோன்றுமிச் சக்தி வளர்க தழைத்து. |
1115 | | நீணிலத்தி லன்பு நிலையத்தா ராதரித்துப் பேணுதலால் சத்தி பிறந்ததினி - ஆணவம் கொண் டெந்த மொழிவந் தெதிர்த்தாலும் வெற்றிநம் சந்தத் தமிழ்மொழிக்கே தான். |
| | 172 கல்கி | 1116 | | புத்தம் புதுமலர்கள் பூக்குமே வண்டினங்கள் சித்தம் மகிழ்ந்துண்ணச் சேருமே நித்தமும் பல்கி வளரும் பசுந்தமிழ்ச் சோலை யாம் கல்கி படர்ந்து வருங்கால் |
| | 173. புத்துயிர் | 1117 | | கந்தன் குமரன் கடம்பன் கதிர்வேலன் செந்தில் முருகன் திருவருளால் - முந்தவரு புத்துயிர் மக்களுக்குப் புத்துணர்வை நன்கூட்டி நித்தமுமே வாழ்க நினைத்து |
| | 174. குமுதம் | 1118 | | செந்தில் முருகா திருமால் மருகா என் சிந்தை குடிகொண்ட தேசிகா - முந்தவரு செந்தமிழ் நாட்டில் சிறந்த குமுதமிது சந்ததம் வாழவரம் தா. | |
|
|