Untitled Document
1131 | | எத்தொழிற்கு முன்னின் றெமக்குத் துணிபுரியும் அத்திமுகத் தண்ணல் அருளாலே - சித்தமகிழ் கையெழுத்தில் வந்தினிய காட்சிதரும் பாரதிநீ வையமிசை வாழ்க வளர்ந்தது. |
1132 | | ஐய மறவே பன்னூல்கள் ஆராய்ந் தறிந்த அரும்புலவர் செய்ய தமிழில் அழகுபெறத் தீட்டும் எழுத்தோ வியங்களெலாம் வையத் தெவரும் கண்டுள்ளம் மகிழத் தாங்கி வரு 'மகிழ்ச்சி' பொய்யைப் போக்கி மெய்யறிவைப் போற்றிப் பொலிக பொலிகவே! |
1133 | | பொங்கல் புதுநாளில் புண்ணிய நன்னாளில் தங்குதை மாதத் தலைநாளில் - மங்கலஞ்சேர் மாவிருதை பூத்த மகிழ்ச்சிமலர் வாழுகவே யாவரும் போற்ற இனிது. |
1134 | | நாடு சிறக்க அறிவோங்க நல்ல நெறிகள் பலகண்டு பீடு பெறவே செந்தமிழைப் பெற்றஅன்னை யெனப் பேணி நீடு நெல்லைச் செய்தியிது நீணி லத்தில் வாழவரம் ஆடும் தில்லை யம்பலவா அருள்வாய் என்றும் அருள்வாயே. | |
|
|