முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 183 |
Untitled Document | | 183. கலைமகள் | 1135 | | பொன்படைத்த பேரைப் புகழ்ந்தபுலை நீங்கியினி இன்படைய நாவேநீ எண்ணுவையேல் - அன்பெழுந்து செந்தமிழைக் காத்தருளுந் தெய்வமென இந்நிலத்து வந்த கலைமகளை வாழ்த்து. |
1136 | | காலத்துக் கேற்றவுடை காலத்துக் கேற்றநடை காலத்துக் கேற்றவணி கைக்கொண்டு - காலத்தில் தப்பாது காட்சிதருங் தாயாங் கலைமகளிங் கெப்போதும் வாழ்க இனிது. |
1137 | | மண்டுபுகழ்ப் பொங்கல் மலராக மக்களெலாம் கண்டுதொழ வந்த கலைமகள்நீ - தண்டமிழ்ப் பூங்காவில் எங்கும் புதிய மணம்வீசி நீங்காமல் வாழ்க நிலைத்து. |
| | 184. தினமலர் | 1138 | | பொங்கல் தினமலர்நீ பூவுலகில் என்றென்றும் மங்கல நாண்மலராய் வாழ்கவே - செங்கமலக் கண்ணன் அரவணையில் கண்வளரும் கார்மேக வண்ணன் அருளால் வளர்ந்து. |
1139 | | ஈசன் அருளால் எழுத்தாளர் ஒத்துழைப்பால்; வாசகரின் ஆசி வலிமையால் - செய்யதமிழ் தென்னந்தை பூத்த தினமலர் வாடாது மண்ணுலகில் வாழ்க வளர்ந்து |
1140 | | மக்களுக்கு நல்வாழ்வு வாழும் வழிகளெல்லாம் சிக்கலறக் காட்டும் தினமலர்நீ - எக்கணமும் வாடாது தெய்வ மலர்போல வாழ்ந்திடுக நீடாழி சூழும் நிலத்து. |
1141 | | ஐயம் அறவே உண்மைகளை ஆராய்ந் தெவர்க்கும் அஞ்சாமல் செய்ய தமிழில் எடுத்தோதும் திருவனந்தைத் தினமலர் நீ ஐயன் முருகன் திருவருளால் அறிஞர் போற்றிப் பாராட்ட வையம் மீது நீடூழி வாழ்க வாழ்க வாழ்கவே. | |
|
|