பக்கம் எண் :

184கவிமணியின் கவிதைகள்

Untitled Document
185. தினமணி

1142 மெய்யெலாம் நன்கு விளங்கி வளர்ந்துவரப்
பொய்யெலாம் மங்கிப் புறம்போக - வையமிசைப்
புத்தொளி வீசிப் பொலிந்து 'தினமணி' நீ
நித்தமும் வாழ்க நிலைத்து.

1143 பொன்னமர்ந்த மார்பன் புவியளந்த சேவடியான்
தென்னரங்கத் தெம்மான் திருவருளால் - மன்னுலகில்
எக்கலையும் போற்ற எழுந்த 'தினமணி' நீ!
மக்களிடை வாழ்க வளர்ந்து.

1144 என்னகமும் ஓங்குதிரு ஏகமும் தங்கிடுவோன்
பொன்னகரம் காத்தபெரும் போர்வீரன் - இன்னருளால்
பல்லாண்டு வாழ்க! இப்பாரில் 'தினமணி' நீ!
எல்லாரும் போற்ற இனிது.

1145 வேத முதல்வன் விரிசடையன் வெண்ணீற்றன்
ஆதி இறைவன் அருளாலே - பூதலத்தில்
எவ்வறமும் போற்றி இனிய 'தினமணி' நீ!
செவ்வையுற வாழ்க தினம்.

தினமணிக்கதிர்

1146 தேடும்அடியவர்தம் சிந்தையிலும் அம்பலத்தும்
ஆடும் பெருமான் அருளாலே - நீடுபுகழ்
நன்னகராம் சென்னை நகரில் உதித்தகதிர்
மன்னுலகில் வாழ்க வளர்ந்து.

186. பொன்னி

1147 எத்தொழிற்கும் முன்நின் றெமக்குத் துணைபுரியும்
அத்திமுகத் தண்ணல் அருளினால் - முத்தமிழ்
அன்பருக்கு வாய்த்த அமுத சுரபியிது
மன்புவியில் வாழ்க வளர்ந்து.