முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 185 |
Untitled Document
1148 | | எத்தொழிற்கும் முன்நின் றெமக்குத் துணைபுரியும் அத்திமுகத் தண்ணல் அருளினால் - முத்தமிழ் அன்பருக்கு வாய்த்த அமுத சுரபியிது மன்புவியில் வாழ்க வளர்ந்து. |
1149 | | கற்றார் மற்றார் எவ்வெவரும் கண்டு கண்டு களிப்படைய வற்றா அமுத சுரபியிது வையத் தென்றும் வாழ்கவெனக் குற்றா லத்தில் அமர்நாதன் குழல்வாய் உமையாள் பங்கனிரு பொற்றாள் மலரை அன்போடு போற்றிப் போற்றிப் பணிவோமே! |
1150 | | என்னகமும் ஏந்துபுகழ் ஏரகமும் தங்கிடுவோன் பொன்னகரம் காத்தபெரும் போர்வீரன் - பன்னிருகை ஐயன் அருளால் அமுத சுரபியிது வையமிசை வாழ்க வளர்ந்து. |
1151 | | வேதப்பிரியான் விரிசடையான் வெண்ணீற்றான் சீதப் பிறையான் திருவருளால் - ஏதுமின்றி ஆழிசூழ் வையத்தமுத சுரபியிது வாழியென் றென்றும் வளர்ந்து. |
1152 | | கற்றார் மற்றா ரெவ்வெவரும் கண்டு கண்டு களிப்படைய வற்றா அமுத சுரபியிது வையத் தென்றும் வாழ்கவெனக் குற்ற லத்தி லமர்நாதன் குழல்வாய் உமையாள் பங்களிரு பொற்றாள் மலரை அன்போடு போற்றிப் போற்றிப் பணிவோமே. | |
|
|