பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு187

Untitled Document
191. தமிழ்ச் சோலை
1158 பாவலர் உள்ளுருகப் பாடி பணிந் தொழுகும்
தேவிமீ னாட்சி திருவருளால் - ஆவலொடு
மாணவர் போற்றி வளர்க்கும் தமிழ்ச்சோலை
நீணிலத்து வாழ்க நிலைத்த

192. காதல்
1159 சுந்தரனுக் காகமுன்னம் தூதுவழி நடந்த
சந்திர சேகரன் செய் தண்ணருளால் - வந்தநம்
கண்ணெதிரில் நின்று களிப்பூட்டும் காதலித்து
மண்ணுலகில் வாழ்க வளர்ந்து.

193. குமரன்
1160 வாக்கினயங் கண்டும் மதிக்கும் பொருள் கண்டும்
ஊக்கநடை கண்டும் உளமகிழ்ந்தோம் - ஆக்கமிகு
செந்தமிழ்நா டாளவரும் செல்வக் குமராநீ
சந்ததமும் வாழ்க தழைத்து.

1161 பண்டிழந்த நாடும் பதியும் தமிழரசு
கொண்டதுபோல் உள்ளம் குளிருமே - எண்டிசையும்
பாரதியார் பாடல் பரிமளிக்க நீயணிந்தித்
தாரணியில் வந்துலவத் தான்.

1162 அந்தி யிருளில் அலைபவருக் காதரவராய்
வந்தருளும் காந்தி மதிபோலச் - செந்தமிழ்த் தாய்
நாட்டினுக்கு நல்வேளை நற்றுணையாம் நல்வழியைக்
காட்டுதற்குத் தோன்றினைநீ காண்.

194. நாட்டியம்
1163 அல்லும்பகலும் நின் றானந்தக் கூத்தாடும்
தில்லைப் பெருமான் திருவருளால் - தொல்லுலகில்
பல்லாண்டு நாட்டியம் பல்கி வளருகவே
எல்லோரும் போற்ற இனிது.