Untitled Document | | 195. பாரத சக்தி | 1164 | | கந்தன் முருகன் கடம்பன் கதிர்வேலன் செந்திற் குமுரன் திருவருளால் - சிந்தைமகிழ் தந்துநிதம் பாரத சக்தி தவறாது வந்துலகில் வாழ்க வளர்ந்து. |
| | 196. விந்தியா | 1165 | | பைந்தமிழ் எங்கும் பரிமளிக்கப் பம்பாயில் விந்தியா என்றும் விளங்கவே - முந்துபுகழ் மன்னும் முடிசூடி மாமதுரை நாடாண்ட அன்னைமீ னாட்சிஅரு ளால். |
1166 | | நாற்றிசையும் காண நடுவெழுந்த மாமலைபோல் ஏற்றியமெய்த் தீபமென யாவருமே - போற்றவரு விந்தியாப் பத்திரிகை மேன்மேல் வளர்ந்திடுக இந்தியா நாட்டில் இனிது. |
1167 | | மக்களெல்லாம் ஒன்றுபட்டு வாழும் வழியறிந்து சிக்கலறக் காட்டிச் சிறப்பெய்தி - மிக்கபுகழ் வித்தகர் போற்றவரு விந்தியாப் பத்திரிகை நித்தமும் வாழ்க நிலத்து. |
| | 197. சௌபாக்கியம் | 1168 | | நாடும் நகரும் நகர்ப்புறமும் நன்றாக வீடும் குடியும் விளக்கமுறப் - பாடுபட்டு மன்னுலகில் சௌபாக்கியம் வாழ்ந்திடுக மாமதுரை அன்னைமீ னாட்சிஅரு ளால் |
1169 | | ஒளவை வளர்த்த அமுதத் தமிழ்மொழியைச் செவ்வையுறக் காட்டிச் சிறந்தோங்கி - இவ்வுலகில் பல்லாண்டு சௌபாக்கியம் பார்மீது வாழ்ந்திடுக எல்லாரும் போற்ற இனிது. |
| | 198. நல்லாயன் | 1170 | | பாவ இருளகற்றும் பானுவாய் வந்துதித்த தேவ குமரன் திருவருளால் - பூவுலகில் நல்லாயன் வாழ்கஎந் நாளும் தமிழ்மக்கள் எல்லாரும் போற்ற இனிது. | |
|
|