Untitled Document
1185 | | நெற்றி நிறைந்த நீறுடையான், நெஞ்சில் பஞ்சாச் சரமுடையான், முற்றி முதிரும் அன்பாலே மூவர் தமிழும் பயில்நாவான், சுற்றம் தழுவும் குணசீலன் தூய நெறிகண் டொழுகிடுவான், கற்ற பெரியோன் கதிரேசன் கடவு ளருளால் வாழியவே! |
1186 | | வண்ண மலர்கள் மணம்வீசி உண்ண அமுதம் உதவுமே - எண்ணியவர் சிந்தை மகிழத் திருவார் இளங்கவிஞன் தந்த தமிழ்ச்சுனை தான். |
1187 | | புத்தகக் காட்டில் புகுந்த களைபுற்றது இத்தனையும் போதுமினி என்னெஞ்சே - நித்தமும் தண்ணிழல் தங்கித் தமிழ்ச்சுனையில் இன்னமுதம் உண்ணலாம் வாநீ உவந்து. |
1188 | | ஆவல் மிகவே அன்பரெலாம் அரிய அமுதம் இதுவென்ன நாவிற் கினிய தமிழ்ச்சுனையை நாடி நமக்குத் தந்தமகன் பாவின் சுவைகள் பரந்தொழுகப் பாடும் பகவ திப்பெருமாள் சேவ லுயர்த்தோன் திருவருளால் தினமும் வாழ்க வாழ்கவே! |
205. பாரதி தமிழ்ச் சங்கமலர் |
1189 | | அப்பாலுக் கப்பால்நின் றாளும் பெருமாளே ஒப்பாரு மில்லா ஒருவனே - இப்பாரில் பொங்கு புகழ் பாரதிபேர் போற்றும் இனியதமிழ்ச் சங்கமலர் வாழவரம் தா. | |
|
|