பக்கம் எண் :

194கவிமணியின் கவிதைகள்

Untitled Document
  பாரதியின் ஜயந்திவிழா மலரின் வாசம்
பாரெங்கும் பாவிநிதம் பரிம ளிக்கச்
சீருயரும் காளிகட்டப்பதியில் வாழும்
தேவிபரா சத்திபதம் சேவிப் போமே.

209. பண்டிதமணியின் கதிர்மணி விளக்கம்

மகிழ்ச்சி உரை

1195 பண்டிதர் போற்றுமகா பண்டிதா! நின்னை யெதிர்
கண்டதுபோல் உள்ளம் களிப்படைந்தேன் - தண்டமிழ்
வித்தர்க்கு வாய்த்த விருந்தாம் மணிவிளக்கப்
புத்தகமென் கைவந்த போது.

வேறு

1196 வித்தகர்க் கமுதாம் நீத்தல்
     விண்ணப்ப உரையின் பாலுன்
பத்தியின் ஆழம்கண்டேன்;
     பசுந்தமிழ் இனிமை கண்டேன்;
புத்தியின் நுட்பம் கண்டேன்;
     புலமையின் வளமும் கண்டேன்;
உத்தம உரைநீ தந்த
     உரையென்ற கைய முண்டோ?

1197 புத்தி நுட்பம் கண்டேனுள்
     புலமை கண்டேன், சிவநெறிசேர்
பத்தி கண்டேன், செந்தமிழின்
     பாகின் இனிய சுவைகண்டேன்;
சித்தம்மகிழ்ந்து நண்பாநீ
     செய்த கதிர்மா மணிவிளக்கை
எய்த்த நாளில் வைப்பாக
     எண்ணிப் போற்றி வாழ்வேனே!

உரைச் சிறப்பு

1198 வையகம் போற்றுதிரு வாசகத்தின் உட்பொருளைக்
கையிற் கனியாகக் காட்டினால் - செய்ய தமிழ்ப்
பேரா சிரியர் பெருமான் கதிரேசன்
ஆராய்ந்து முற்றும்அறிந்து.