Untitled Document
1205 | | வையத் தென்றும் சிவஞானம் மலர்ந்து தெய்வ மணங்கமழச் செய்யும்அரிய தமிழ்மறையாம் திருவாச கத்தின் உட்பொருளை கையிற் கனிபோல்காட்டிநம் கதிரே சப்பே ராசிரியன் தையல் பாகன் திருவருளால் தழைத்து வாழ்க வாழ்கவே! |
1206 | | வாதவூர் மாமுனிவன் மனங்க னிந்து மக்க ளெல்லாம் சிவ நெறிகண் டுய்யுமாறு கோதிலா தமைத்ததிரு வாச கப்பூங் கோயிலுக்குச் சிறந்தகதிர் மணிவி ளக்கம் ஓதரிய பேரன்பால் உபயம் வைத்தோன் ஓங்குபுகழ்க் கதிரேச நண்பன் தில்லை ஆதிரையான் அழகிய சிற்றம்ப லத்தான் அருளாலே நீடுழீ வாழ்க மாதோ! |
1207 | | வண்டமிழ் நாட்டுக்கு வாய்த்த மணிவிளக்கம் கண்ட கதிரேசன் கண்டதுபோல் - மண்டுபுகழ் வாதவூர் அண்ணல் மனங்கண்ட மாதவரிப் பூதலத்தில் உண்டோ புகழ்? |
1208 | | இன்னமுகச் செந்தமிழ்நூல் இன்னும் பலதந்து மன்னுநலங் கண்டுநிதம் வாழியவே - துன்னுபுகழ் பேரா சிரியர் பெருமான் கதிரேசன் நீராழி சூழும் நிலத்து. |
210. புதுமைப்பித்தன் நினைவு மலர் |
1209 | | சிந்தைக் கினிய கட்டுரைகள் சிறந்த கதைகள் பற்பலவும் தந்த புதுமைப் பித்தன்பேர் தமிழ்நாட் டன்பர் போற்றிடவே | |
|
|