Untitled Document | | வேறு | 1213 | | நித்தம் இளமை நிலைக்கும் படியீசன் வைத்தில னேயென்று வருந்துகின்றேன் - சித்த மகிழ் சித்திரமும் பாட்டும் சிறந்து விளங்கிடுமிப் புத்தகத்தைப் பார்க்கும் பொழுது. |
1214 | | கன்னலும், கண்டும், கனியும் அனையகவி சின்னஞ் சிறுவருக்குச் செய்தளித்தான் - மன்னு தமிழ்ப் பூவலந்து வாசமெழும் 'பூஞ்சோலை' ஆசிரியன் பாவலன் வள்ளியப்பன் பார். |
1215 | | கன்னற் கவியால் கவிக்கிசைந்த சித்திரத்தால் தன்னிகரில் இந்நூலைத் தந்தனனே - மன்னு தமிழ்ப் பள்ளிச் சிறுவரொடு பண்டிதரும் பாராட்ட வள்ளியப்பன் உள்ளம் மகிழ்ந்து. |
1216 | | பன்னிருகை வேலா! பழனிக் குமரா! நின் பொன்னடிகள் போற்றிப் புகழ்கின்றேன் - மன்னுபுகழ்ச் செந்தமிழ் நாட்டில் சிறந்த 'மலரு முள்ளம்' சந்ததம் வாழவரம் தா. |
| | 212. கம்பர் தரும் இராமாயணம் | 1217 | | கம்பன் கவியின் கனியமுதம் ஊட்டி நம்மை அம்புவியில் தேவராய் ஆக்கிடுவோன் - நம்பெரியன் செந்தமிழ்ச் செல்வன் சிதம்பர நாதநண்பன் சந்ததம் வாழ்க, தழைத்து! |
1218 | | பாடிப் படித்தமுதம் பாவில் வடித்தெடுத்து நாடி நமக்குதவும் நல்லறிஞன் - நீடுபுகழ் செய் குணசீலன் சிதம்பர நாதவள்ளல் வையமிசை வாழ்க, மகிழ்ந்து! |
1219 | | பாவில் சுவை அறிந்து பாவலரைப் பாரறிய ஆவலொடு போற்றும் அருளாளன் - மேவுமன்பர் சித்தம் மறவாச் சிதம்பர நாதவள்ளல் நித்தமும் வாழ்க, நிலத்து! | |
|
|