Untitled Document
1231 | | சொல்லால் பொருளால் தொடையால் வருமின்பம் எல்லாம் ஒருங்குநமக் கீயுமே - நல்லார்வாய் ஆர்ந்த புகழ்சேர் அசலாம் பிகைதந்த காந்தி புராணமிது காண். |
1232 | | அன்னைதமிழ் நங்கை அலைகொண்ட செல்வநங்கை மன்னியதென் றுள்ளம் மகிழ்ந்தனளால் - இன்னமுதம் ஆர்ந்த கவியில் அசலாம் பிகைதந்த காந்தி புராணமிதைக் கண்டு. |
1233 | | கல்லாரும் பன்னூல்கள் கற்றபெரும் பண்டிதரும் எல்லாரும் இன்பமிக எய்துவரே - நல்லார்சொல் ஆர்த்தகலைச்செல்வி அசலாம் பிகைசொன்ன காந்தி புராணமிதைக் கற்று. |
1234 | | தாரணியை முற்றுமே தண்ணருளால் வென்ற வீரனது மாட்சி விளக்குநூல் - பேரழகு வாய்ந்த கவிகள் மலர்ந்து மணங்கமழும் காந்தி புராணமிது காண். |
1235 | | மூல நூல்கள் ஆராய்ந்து முற்றி முதிர்ந்த அறிவாலே பாலும் தேனும் கலந்தொழுகு பாவில் அசலாம் பிகைதேவி ஞாலத் தெவரும் பாராட்ட நவின்ற காந்தி புராணமிது ஆல நீழல் எம்பெருமான் அருளால் வாழ்க வாழ்கவே! |
1236 | | உள்ளம் உருகச் செவிகுளிர ஓதும் நாவில் அமுதூற தெள்ளத் தெளிந்த செந்தமிழில் தேவி அசலாம் பிகைசொன்ன வள்ளல் காந்தி வாழ்வாங்கு வாழ்ந்த வாழ்க்கைப் புராணமிது வெள்ளம் தாழும் விரிசடைய விமலன் அருளால் வாழ்கவே! | |
|
|