முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 207 |
Untitled Document | | 231. ஒளவையார் நாடகம் | 1250 | | மந்திரமோ? தந்திரமோ? மாயமோ? சண்முகத்தின் விந்தை நடிப்பு விசித்திரமோ? - செந்தமிழ்நாடு அன்றுகண்டு போற்றி அடிபணிந்த ஒளவையை இன்றுகண்ட காட்சி இது. |
1251 | | நாடும்இசையால் நடிப்பால் அரங்கமைப்பால் பீடுபெறு செந்தமிழ்ப் பேச்சழகால் - நீடுலகில் எவ்வெவரும் கண்டுமகிழ்ந் தின்புறுதற் கேற்றதிந்த ஒளவைவரு நாடகமே யாம். |
1252 | | பண்டிதரும் பாமரருள் பாலர் முதியோரும் பெண்டுகளும் ஒக்கலையில் பிள்ளைகளும் - கண்டுகண்டு சித்தம் மகிழச் சிறந்துதமிழ் நாடகங்கள் நித்தம் வளர்க, நிலத்து! |
| | 232. குடியரசு வாழ்த்து | 1253 | | ஆதிபகவன் அறவாழி அந்தணன் யாதும் உவமையிலான் இன்னருளால் - ஓதுபுகழ் இந்திய நாட்டில் எழுந்த குடியரசு சந்ததம் வாழ்க தழைத்து. |
1254 | | விண்ணவரும் கண்டு வியப்பரே; - மெச்சிநிதம் மண்ணவரும் போற்றி மகிழ்வரே - புண்ணியஞ்சேர் இந்திய நாட்டில் எழுந்த குடியரசுக்கு எந்தஅரசு ஈடாகும் என்று. |
| | வேறு | 1255 | | எத்திசையும் புகழ்வளர விரோதி ஆண்டில் எழுந்திடுதை பதின்மூன்றில் குருவா ரத்தில் புத்தியினால் அனுபவத்தால் புலமை தன்னால் போற்றரிய சேவையினால் புகழ்பெற்றோர்கள் சித்தமகிழ் புதுடெல்லி நகரில் கூடி தேர்ந்தகுடி யரசுலகில் சிறந்து வாழ, பத்தருக்குத் துணைபுரியும் பரந்தாமா! நின் பாதமலர் போற்றிநிதம் பணிகின்றோமே. | |
|
|