பக்கம் எண் :

208கவிமணியின் கவிதைகள்

Untitled Document
வேறு

1256 உண்ணும் உணவுக்கு ஏங்காமல்,
     உடுக்கும் ஆடைக்கு அலையாமல்,
பண்ணும் தொழில்கள் பல காண்போம்;
     பஞ்சப் பேயைத் துரத்திடுவோம்;
அண்ணல் காந்தி வழிபற்றி
     அகிலம் புகழ வாழ்திடுவோம்;
எண்ணும் அன்பர் உளம்தங்கும்
     இறைவா! துணைசெய் தருள்வாயே.

1257 ஈரம் இரக்கம் இல்லாமல்
     இருநூ றாண்டு தளராமல்,
கோர ஆட்சி புரிந்தவரின்
     கொட்டம் அடங்கக் காந்திமகா
வீரன் செய்த அறப்போரின்
     வெற்றி தந்த குடியரசு
பார தத்தில் நீடுழி
     பல்கிப் பெருகி வாழ்கவே!

1258 வெற்றி சிறந்த விரோதியினில்
     விளங்கு மகரம் பதின்மூன்றில்
கற்ற பெரியோர் மதிவல்லோர்
     கண்ட நமது குடியரசு
வற்றில் கங்கை காவேரி
     வளஞ் செய் பரத நாட்டினிலே
சிற்றம் பலவன் திருவருளால்
     தினமும்வாழ்க வாழ்கவே!

வேறு

1259 விஞ்சுபுகழ் வெற்றிதரு விரோதி ஆண்டில்
     விளங்கிடு தை பதின்மூன்றில் வியாழ நாளில்
நெஞ்சுவந்து பாரதத்தாய் பெற்ற மக்கள்
     நிறுவிய நற் குடியரசு நிலைத்து நித்தம்