முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 213 |
Untitled Document 1276 | | பைங்கிளிவா வாவென்று பங்கயச்செல்வியுனை அங்கைகள் நீட்டி அழைத்தாளோ? - பொங்கு புகழ் மங்கை சரோஜினி நீ வானுலாக வாழ்வுபெற இங்கிருந் தேகினாய் இன்று. |
1277 | | வெட்டி முறித்த விறகெனவோர் வீணையினைச் சுட்டெரித்த பாவியென்று தூற்றாதோ? - சிட்டர் புகழ் அன்னை சரோஜினியின் ஆவியுண்ட கூற்றமே! உன்னையினி என்றும் உலகு. |
1278 | | பைங்கிளியாய்த் தேன்கலந்த பாலமுதம் உண்மையாள் அங்கையிலே தங்கியுரை யாடுதற்கோ? - இங்கிருந்து மாதரசி நன்மதுர வாணி சரோஜினி நீ மீதெழுந்து சென்றாய் விரைந்து |
| | 238. உ.வே.சா. | 1279 | | எவ்வேடு தேடிநீ எந்நாட்டில் எப்பகுதியில் எவ்வீடு நோக்கியின் றேகினையோ? - அவ்வான் அமிழ்தம் அமிழ்தமென அள்ளியள்ளிச் சங்கத் தமிழ்தந்த சாமிநா தா! |
1280 | | கண்ணுஞ் சடையாமல் கையுந் தளராமல் உண்ணப் பசியெழுவ தோராமல் - எண்ணி யெண்ணிச் செந்தமிழ்த் தாய்க்குநீ செய்த திருத்தொண்டுக் கிந்தநிலத் துண்டோ? இணை? |
1281 | | சித்திரத்திற் பார்ப்போம்; சிலை செய்து கும்பிடுவோம்; புத்தகத்திற் போற்றிப் புகழ்ந்திடுவோம் - இத்தரையில் சந்தப் பொதிகைத் தமிழ்முனியென் றுன்னை நிதம் சிந்தையிற் கொண்டு தெளிந்து |
| | 239. சகுந்தலை | 1282 | | மண்ணில் இனிய வாழ்வினுக்கு வாய்த்த நல்ல துணை யென்ன எண்ணி யிருந்த மணவாளன் ஏங்கி ஏங்கி உளம் வருந்தக் | |
|
|