Untitled Document
1271 | | தொக்க கொல்லம் ஆயிரத்துத் தொண்ணூ
ற் றொ டொன்பதினில் பக்கமதி ஆடியிரு பான்மூன்றில் - மிக்க குரு வாரமதில் நள்ளிரவில் மாமூல மன்னவன் இத் தாரணியின் வாழ்வுநீத் தான். |
1272 | | திருமால் திருவடிபோய்ச் சேர்ந்துதிரு மூலப் பெருமான் பெரும்பேறு பெற்றான் - உருமேங்கு விண்மழை போல வியன்வஞ்சி மாதழுத கண்மழை வெள்ளங் கடந்து |
1273 | | பொய்யுடலைக் கொண்டு புகழுடலைக் கண்டஞ்சி வையகம்விட் டோடும் மறலியே - ஐயமறக் கற்றுத் தெளிந்த கவிவாணர் சொல்வீர வெற்றி உனக் குண்டோ? விளம்பு. |
1274 | | அலைவளைத்த புவிமுழுதும் அளந்தபெரும் புகழுடையான் அரசர் கண்டு தலைவளைத்து வணங்குமொரு குருதேவன் சலியாது தரணிமீது கலைவளர்த்த கவியரசன் தாகூரின் றெம்மை யெல்லாம் கைவிட்டு, ஐயோ! மலைவிளக்கும் மறைந்ததென மறைந்திட்டான்! என்னேஇம் மனித வாழ்க்கை! |
1275 | | காந்தி திருவடியோ? கற்பகமோ? வாணியமுது ஏந்தும் எழிற்கரமோ? யாரறிவார்? - ஆர்ந்தபுகழ் மங்கை சரோஜினியாம் வண்ணக் கிளியின்று தங்கி யிருக்குமிடம் தான். | |
|
|