முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 215 |
Untitled Document
1286 | | புத்த முனியும் புனிதன் அரிச் சந்திரனும் உத்தமன் ஏசுவும் ஒன்றானோன் - மெய்த்தவத் தோர் வந்தனைசெய் காந்திமகான் வாய்மலரும் பொன்மொழியை எந்தநாள் கேட்போம் இனி? |
1287 | | சத்தியத்தால் மன்அரிச் சந்திரனைத் தண்ணருளால் புத்தபெரு மானையொத்த புண்ணியனை - உத்தமனாம் அந்தணனைக் காந்தி அடிகளை அன்போடு சிந்தனைசெய் நெஞ்சே தினம். |
1288 | | போரின் வெறியால் உலகமெலாம் புரண்டு மறியும் இந்நாளில் நேரும் சீரும் தரும்நீதி நெறியீ தென்று காட்டிட, நம் பார தத்தாய் செய்ததவப் பயனாய் வந்த காந்திமகான், மார்பில் குண்டு பட்டிறந்தான் மண்ணில் அறமும் மடிந்ததுவோ? |
1289 | | மெய்யும் அருளும் துணையாக வெற்றி காணும் ஜெகவீரன், செய்யும் தொழில்கள் உலகத்தின் சேமங் கருதிச் செய்பெரியோன், ஐயன் ராமன் திருநாமம் அன்பு பெருகக் கனிந்தோதி வெய்ய குண்டு பட்டிறந்தான் விதியே? நீ இதுவேயோ? |
1290 | | என்னைச் சுடுகின் றவன்மீதும் இரக்கங்கொண்டு முகமலர்ந்து மன்னித் துயிரை விடுவனென்ற வார்த்தை முற்றும் பலித்ததையா! உன்னை யொத்த அருளாளர் உலகில் வேறு கேட்டறியோம்! அன்னை பாதத் தேவிதரும் அருமைக் காந்தி மாமணியே! | |
|
|