Untitled Document
1291 | | மெய்யே நெஞ்சில் நாடிடுவார் விஞ்சும் பொறுமை பெற்றிடுவார் வையம் மகிழ அருள் நெறியில் வாழ்வு கண்டு வாழ்ந்திடுவார் தெய்வம் தொழுவார் நடு நீதி திறம்பா தென்றும் காத்திடுவார் ஐய மின்றிக் காந்திமகான் அன்ப ராவார் அறிவீரே. |
1292 | | வையத்து வாழ்வாங்கு வாழ்ந்தவன் வானுறையும் தெய்வத்தோ டொத்த திருவுடையான் - பொய்யற்ற காந்திமகான் கற்பனைகள் கற்றுக் கடைப்பிடித்த மாந்தரென்றும் வாழ்வர் மகிழ்ந்து. |
1293 | | தேடித்தேடி மக்கள் அழ, திகைத்த மனைவி சோர்ந்து விழ, வாடி உற்றார் உறவினர்கள் வற்றாக் கண்ணீர் வடித்தலற ஈடும் எடுப்பும் இல்லாத ஏக நீதி பதியென்றிந் நாடு புகழ்சத் தியநேச நண்பன் எம்மைப் பிரிந்தனனே! |
1294 | | ஈசன்பாதம் மறவாமல் என்றும் போற்றி வழிபடுவோன்; ஆசைப் பேயைத் தலையில் அடித்து அடக்கி யாளும் ஆற்றலுளோன்; கூசி டாமல் நடுநீதி கூறும் கூர்த்த மதியுடையோன்; நேச மிகுசத் தியநேசன் நிலத்தில் வாழ்வு நீத்தனனே! |
1295 | | ஆங்கி லத்தில் செந்தமிழில் அரிய நூல்கள் பலகற்றோன்; பாங்கு பெறுதல் அடயோகப் பயிற்சி மிக்க பண்புடையோன்; | |
|
|