முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 217 |
Untitled Document | | தேங்கி யன்பு கனிந்தொழுகத் தெள்ளத் தெளிந்த மொழிதருவோன்; ஓங்கு புகழ்சத் தியநேசன் உலகை நீந்துச் சென்றனனே! |
1296 | | சாதி மதபேதம் சற்றேனும் மின்றிநடு நீதி வழுவா நெறிநின்று - பூதலத்தில் சத்தியம் காணும் தரும தயாளனைநீ நித்தியம் நெஞ்சே நினை. |
1297 | | தேர்ந்த புலவன் தெளிந்த அடயோகி வார்ந்தின் னமுதொழுகு வாக்கினான் - ஆர்ந்தபுகழ்ச் சத்தியநேசத் தமிழன்புச் செல்வனைநீ நித்தியம் நெஞ்சே நினை. |
1298 | | மாசெலாம் போயகல மௌனவிர தம்காத்துப் பூசனைகள் செய்தபெரும் புண்ணியவான் - பேசுபுகழ்ச் சத்திய நேசன் சலியாநல் தொண்டனைநீ நித்தயம் நெஞ்சே நினை. |
1299 | | கண்ணாரக் கண்டு கடவுளைப் போற்றிநிதம் பண்ணார்ந்த செந்தமிழ்ப்பா பாடுதற்கோ? - அண்ணல்நீ மண்ணுலகில் எம்மை மறந்து மனந்தேறி விண்ணுலகம் சென்றாய் விரைந்து. |
1300 | | உத்தம நண்பன் உலகுபுகழ் ஞானியெம் சத்ய நேசத் தமிழ்ச் செல்வன் - நித்தமும் அண்ணலடி நீழல் அமர்ந்து புகழ்பாட விண்ணுலகு சென்றான் விரைந்து |
243. இசையரசு இலட்சுமண பிள்ளை |
1301 | | கந்தருவ நன்கர்க்கோ? கண்ணுதல் சேவடிக்கோ? சந்தமெழு தண்பொதிகைச் சாரலுக்கோ? - முந்துதமிழ் இன்னிசை மன்னன் இலக்குமணன் ஏகினான் மன்னிலத் தெம்மை மறந்த. | |
|
|