முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 219 |
Untitled Document | | தெய்வ ஞான தீபமெனத் திகழ்ந்த யோகி அரவிந்தன் வையம் காணாப் பேரின்ப வாழ்வு கண்டு மறைந்தனனே! |
1306 | | பீடாரும் வங்க வளநா டதனில் பிறந்து வந்து, நீடாழி மோது புதுவைப் பதியில் நிலைத்து நின்று, வாடாது மங்கி மறையாமல் சூறா வளிவரினும் ஆடா தொளிர்ந்த அரவிந்த ஜோதி அணைத்ததுவே! |
246. செய்குத்தம்பிப் பாவலர் |
1307 | | ஓரும் அவதானம் ஒருநூறு செய்திந்தப் பாரில் புகழ்படைத்த பண்டிதனைச் - சீரிய செந்தமிழ்ச் செல்வனைச் செய்குதம்பிப் பாவலனை எந்தநாள் காண்பேன் இனி! |
247. அனந்தகிருஷ்ண அய்யங்கார் |
1308 | | ஆரியமும் செந்தமிழும் ஆராய்ந்து கற்றமகான் பாரிலிணை யில்லாத பண்டிதன் - சீரிய அந்தண சீலன் அனந்தகிருஷ்ண நண்பனையான் எந்தநாள் காண்பேன் இனி! |
1309 | | எப்பாலும் போற்றும் இசைத்தமிழ்ச் செல்வா! என் அப்பா! அழகியசெல் லையா! நான் - இப்பாரில் சிந்தை குளிரச் சிரித்தொளிரும் உன்முகத்தை எந்தநாள் காண்பேன் இனி? | |
|
|