Untitled Document 249. ராஜா ஸர். அண்ணாமலைச் செட்டியார் |
| | 1310 புண்ணியங்கள் பலபுரிந்தோன் புவிநிறைந்த புகழுடையோன் புலவர் போற்றும் கண்ணியவான் தில்லையிலே கலைவளரப் பெருங்கழகம் கண்ட கோமான் தண்ணளியான் நுண்ணறிவோன் தனவணிகர் குலஞ்செய்த தவத்தால் வந்தோன் அண்ணல் அண்ணா மலைமன்னை இழந்துலகம் அருந்துயரில் ஆழ்ந்த தம்மா! |
1311 | | அன்பின் கடலை அமுத மொழியரசை துன்பம் துடைத்தருளும் தோன்றலை - இன்பமெழப் பொன்னாடை தேர்ந்தெனக்குப் போர்த்த பெருந்தகையை எந்நாள்யான் காண்பேன் இனி! |
1312 | | அன்னையே போல அருந்தமிழை ஆதரித்த பொன்னையா விண்ணுலகம் போயினனே! - மன்னுபுகழ்ப் பாவலர் நாவலர் பத்திரிகை ஆசிரியர் யாவரும் தேடியழ இங்கு. |
1313 | | ஐயமறக் கற்றவனை ஆராய்ச்சி வல்லவனை செய்வனவெல் லாம்திருந்தச் செய்பவனை - மெய்யன்பு தங்கும் மனத்தவனை சங்கரய்ய மாமணியை எங்குநாம்காண்போம் இனி! |
252. ஆர்.கே. சண்முகம் செட்டியார் |
1314 | | மன்னாதி மன்னர் மதிக்கும் மதிப்புடையான் பொன்னாடை வந்தெனக்குப் போர்த்தமகான் - தென்னாட்டுச் சிங்கவே றான திருக்கோவைச் சண்முகனை எங்கேநான் காண்பேன் இனி! | |
|
|