முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 221 |
Untitled Document | | 253. திரு.வி.க. | 1315 | | ஏழைத் தொழிலாளிக் கென்றும் துணைநின்று வாழும் தமிழன் வளம்பெருக்கி - ஊழியங்கள் செய்யப் பிறந்த திரு.வி,க. சென்றடைந்தான் தையலொரு பாகனிரு தாள். |
| | 254. பண்டிதமணி | 1316 | | பத்தரெலாம் பாராட்டும் பண்டித மாமணிநீ அத்தன் திருவடிக்கா ளாயினையோ! - நித்தமவர் கற்றுக் களிக்கும் கதிர்மணி நல்விளக்கம் முற்றப்பெறுவதன் முன். |
1317 | | வையமெலாம் போற்றுதிரு வாசகத்தின் மெய்ப்பொருளை ஐயமறக்கண்டின் றடைந்தனையோ! -செய்யதமிழ் மன்றத் தறிஞர் மணியாய் ஒளிவீசி நின்ற கதிரேசா, நீ! |
1318 | | என்று வருவான் எமனென் றெதிர்நோக்கி நின்ற தளர்கின்றேன் நித்தமுமே - மன்றில் நடங்கண்ட ஈசன் நடராஜன் பாதத் திடங்கண்டு வைநீ எனக்கு. |
1319 | | செநத்மிழ்ச் செல்வம் சிறந்து வளர்ந்துவரச் சிந்தைமகிழ் பன்னூல்கள் செய்தளித்து - முந்துபுகழ் பூண்ட கதிரேசப் புலவர் பெருமானை யான்டுநாம் காண்போம் இனி! |
1320 | | விஜய் வருஷம் விளங்குதுலா மாதம் இசைய வருந்தேதி எட்டாம் - இசைவளர அம்புவியில் வாழ்ந்த அறிஞன் கதிரேசன் நம்பனடிக் காளான நாள். |
| | 255. டி.கே.சி. | 1321 | | மன்னும் விஜய வருஷத்தில் மாசியினில் உன்னி வருந்தேதி ஓரைந்தாம் - இன்னமுத சீலன் ரசிகமணி டி.கே.சி. நண்பனிந்த ஞாலம் தனைநீத்த நாள். | |
|
|