Untitled Document
1322 | | புன்னகை பூத்துப் பொலியும் முகத்தழகன் கன்னலைச் சொல்லிற் கலந்தளிப்போன் - மன்னுபுகழ்ச் செந்தமழ்ச் செல்வன் சிதம்பர நாதனை நான் எந்தநாள் காண்பேன் இனி! |
1323 | | அன்னைபோ லென்னை அருவியில் நீராட்டி இன்னமுதும் பக்கத் திருந்தூட்டித் - தன்னொடு தங்குதங் கென்று சொன்ன தங்கக் குணத்தானை எங்குநான் காண்பேன் இனி! |
1324 | | தண்பொருநை நெல்லைத் தமிழர் குலதிலகன் நண்பன் சிதம்பர நாதனைப்போல் - பண்பமைந்த பாவின் நயமறிந்த பாவலரைப் பாராட்ட யாவருள ரையா இனி? |
1325 | | என்னருமை நண்பா! இனிய கலைரசிகா! தன்னிகர் இல்லாத் தமிழ்ச்செல்வா! - மன்னுமுளம் தத்தளித்து நின்றன் சரகமவி பாடுதற்கோ இத்தனைநாள் வாழ்ந்திருந்தேன் யான்? |
1326 | | அம்பொன் நகரில் அமர்ந்திடினும் அமுதே உணவாய் அருந்திடினும் கம்பன் கவியைப் பாடாமல் கன்னித் தமிழைப் பேசாமல் உம்பர் உலக வாழ்க்கையிலுன் உள்ளம் மகிழ்ச்சி கண்டிடுமோ? நன்பன் பாதம் மறவாத நண்பர் ரசிக மாமணியே! |
1327 | | உள்ளக் கலைப்பண் பொளிரும் முகத்தானைத் தெள்ளமுதம் அன்னகுண சீலனை - வள்ளலைச் செந்தமிழ்ச் செல்வச் சிதம்பர நாதனை நான் எந்தநாள் காண்பேன் இனி. | |
|
|