Untitled Document 1375 | | அங்கயற் கண்ணிக்கும் அண்ணலுக்கும் ஆபத்தில் தங்குமிடம் ஈந்த தனியூராம் - பொங்குபுகழ் ஆரையூர்க் கீடாய் அவனியின் மீதெந்த ஊரையான் சொல்வேன் உணர்ந்து. |
| | 266. நாடகம் | 1376 | | கண்ணைச் செவியைக் கருத்தைக் கவர்ந்து நமக்கு எண்ணரிய போதனைகள் ஈவதற்கு - நண்ணுமிந்த நாடக சாலையொத்த நற்கலா சாலையொன்று நீடுகிலல் உண்டோ? நிகழ்ந்து. |
| | 267. அரியர் யார்? | 1377 | | பெரியோர் செய்த பெரும்பிழை யதனைச் சிறுபிழை யென்று தேய்த்து விடுவர்; சிறியோர் செய்தது சிறுபிழை எனினும் பெரும்பிழை யென்று பேரிகை கொட்டுவர்; உள்ளதை உள்ளவா றுரைப்பவர் அரியர் அம்மா அவனி மீதே! |
| | 268. முருகன் நிந்தாஸ்துதி | 1378 | | தந்தை மலையாளி; தாய்மாமன் மாட்டிடையன்; வந்தஒரு மச்சானும் வாணியனே - சந்ததமும் விண்முகத்தை எட்டும் அயில் வேலேந்து பன்னிருகைச் சண்முகற்குச் சாதியெது தான்? |
| | 269. சிரங்கு | 1379 | | செந்தில் குமரா! திருமால் மருகா! என் சிந்தை குடிகொண்ட தேசிகா! - நொந்தஇம் மெய்யிற் சிரங்கை விடியுமட்டுஞ் சொறியக் கையிரண்டு போதாது காண். |
1380 | | வாரம் முடங்காமல் வைப்பெண்ணெய் தேய்த்திட்டேன்; வார மருந்தெல்லாம் சாப்பிட்டேன் - வீரம் குறைந்திடக் காணேன்; குமரா! சிரங்கு மறைந்திடத் தாநீ வரம். |
1381 | | உண்ட மருந்தாலும் உடல்முழுவ தும்பூசிக் கொண்ட மருந்தாலும் குணமிலையே - மண்டு | |
|
|