பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு233

Untitled Document
சிரங்கப்பா ராயா! சினமாறிக் கொஞ்சம்
இரங்கப்பா, ஏழை எனக்கு.
1382 முத்து பவழம் முழுவயிரம் மாணிக்கம்
பத்தியொளி வீசு பதக்கமெலாம் - சித்தன்
சிரங்கப்ப ராயன் சிறியேன் எனக்குத்
தரங்கண்டு தந்த தனம்.

270. மான்தோல் பரிசு
1383 எப்பே ரன்பன் எனக்கு இவ்வுரிய
தூயகுண சண்முக சுந்தரன் - மேயபுகழ்
ஆன்றோர் முனிவருங்கள் ஆசை கொள்ளும் சேர்புள்ளி
மான்றோல் அணிந்தான் மகிழ்ந்து

271. தென்குமரி
1384 தென்னெல்லை காத்தருளும் தேவி குமரிநின்
பொன்னடியைக் கும்பிட்டுப் போற்று கின்றேன் - மன்னுபுகழ்ச்
செந்தமிழ்நா டொன்றிகித் தேவர்நா டொத்துலகில்
சந்ததமும் வாழவரம் தா.

272. இயற்கை அற்புதம்
ஆனந்தக் களிப்பு
1385 அற்பிதக் காட்சி யீதையா - கண்ணுக்
கானந்தம் ஆனந்தமையா

1386 பொன்னிறம் காணுதே அண்ணா - ஒளி
     பொங்கி மரகதம் மின்னுதே அண்ணா
சென்னெற் கழனியோ அண்ணா - இது
     செல்வத் திருவாழரங்கமோ அண்ணா

1387 மேகம் படருது பாராய் - அதை
     வேட்டையாடிச் சுடரோட்டுது பாராய்
ஏக மயமாக வேதான் - உல
     கெங்கும் பரந்தொளி வீசுது பாராய்

1388 செங்கதிர் செய்யும் விழாவில் - மலர்த்
     தேனையு முண்ணாதலையுமே வண்டு
தங்கு குளக்கரைத் தாரா - சுற்றித்
     தன்னை மறந்து முழங்குவதே ஐயா