Untitled Document | | | மருமக்கள் வழி மான்மியம் | | | | விநாயகர் வணக்கம் | 1389 | 1 | | எம்பெரு மானே! இணையடி பரவும் அன்பினர் வேண்டிடும் அவையெலாம் அளிக்க யானை நீள்கரம் ஏந்திய கடவுளே! உலகெலாம் போற்றும் ஒருவனே! உனது |
| 5 | | தந்தையோ, என்றும் கையில் தலையோ டேந்தி இரந்து திரிவான், இருப்பிட மில்லான், அம்பலந் தோறும் ஆடி அலைவான், அமிழ்தென நஞ்சையும் அள்ளி யுண்பான், |
| 10 | | பித்த னாகிப் பேயொடு குனிப்பான், நாடிய பொருளெலாம் நாசஞ் செய்வான். மாமனோ, பூமக ளோடும், புவிமக ளோடும் மதித்திட அரிய வளமெலாம் ஒருங்கு |
| 15 | | வைகுந் திவ்விய வைகுந் தத்தில் ஆயிரம் பணாமுடி அரவணை மீதே அறிதுயி லமர்ந்திவ் வகில மெல்லாம் ஆளும் பெரிய அண்ணலே யாயினும், கபட நாடகன்; கையிற் சக்கரம் |
| 20 | | இருந்தும், எவர்க்கும் ஈயாக் கள்வன், ஆதலின், நீயும், தந்தை வீடெனத் தங்கிட மின்றி மாமன் வீடென மதிப்பிட மின்றிச் சந்தியும் தெருவும் தண்ணீர்க் கரையும் |
| 25 | | மரத்தி னடியும் வாழிட மாக இருந்தனை, உன்போல் இருவழி கட்கும் இடைவழித் தங்கி இடர்ப்படும் எங்கள் வருத்த மெல்லாம் அறிந்திட வல்லவர் அறிந்து முற்றும் அகற்றிடும் நல்லவர் |
| |
|
|