பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு235

Untitled Document
30 நடுநிலை கண்ட நாயகர் வேறிங்கு
ஒருவரும் இல்லை; உன் திருவடி பணிந்து
மருமக் கள்வழி மான்மியம் பாடத்
தொடங்கினன், வந்து துணைநின் றிந்நூல்
இனிது முடிய இதயம்
35 கனிவு செய்தெனக் காத்தருள் வாயே.

அவையடக்கம்
1390 36 அருந்தமிழ் அகத்தியன் ஆராய்ந் திடவும்
கேள்வியிற் பெரியநக் கீரன் கேட்கவும்
கல்வியிற் பெரியனாம் கம்பன் காணவும்
இயற்றிய நூலிதென் றெண்ணவும் படுமோ?

40 மருமக் கள்வழி யென்னும் வனத்தில்
புலிகள் சூழுமோர் புல்வாய் போல
வலையிற் படுமோர் மணிப்புறாப் போல
கொள்கொம் பற்றுத் துவள்கொடி போல,
ஒருத்தி ஏழை ஒருதுணை யில்லாள்

45 தானும் மக்களும் தமிய ராகிப்
பொறியும் கலங்கிப் போதமும் கெட்டுப்
புலம்பும் பொழுது, புண்ணிய சீலரே!
தொல்காப் பியமுதல் பல்காப் பியங்களும்
கற்றுத் தெளிந்த கவிவல் லோரே!

50 விகாரம் முற்றும் விரவி வருமலால்
பொருட்சுவை சொற்சுவை பொருந்திவந் திடுமோ?
எதுகை மோனை இசைந்துவந் திடுமோ?
அணிகள் பற்பல அடுக்கிவந் திடுமோ?
ஆதலின், இதனைப்

55 பதவியும் பணமும் படிப்பு மிலாதேன்
பஞ்சப் பாட்டெனப் பழித்திக ழாதீர்.
இலக்கண வழுஉக்கள் இருப்பினும், அவற்றை
வலித்தல் மெலித்தலாய் மதித்துக் கொண்மின்
நீட்டல் குறுக்கலாய் நினைத்துக் கொண்மின்