முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 237 |
Untitled Document
| 90 | உற்றார் உறவினர் ஒருவரு மேயிலை; ஒருதடி நிலமும் ஒரணை ஏரும் ஒருசிறு குடிலும் உண்டெமக் காஸ்தி. ஐயோ தெய்வமே! ஐயோ தெய்வமே! உற்றதெ லாம்சொல ஒழிகழி நூலாம், |
| 95 | ஒருநாள் போதுமோ? இருநாள் போதுமோ? முற்றும் கேளும், முடிவையும் பாரும்! தாழையம் பதிக்குத் தலைவர் - அவர் பெயர் ஏழையான் சொல்வது இசையுமோ? அம்மா! பாவியாம் என்னைப் பதினா றாண்டில் |
| 100 | ஐந்தாம் மனைவி யாக மணந்தனர். கணவர் வீட்டுக் கதையினைக் கேளும்; மனைவியர் வேலை வகையினைக் கேளும்; தொழுத்துச் சாணம் வழிக்க ஒருத்தி, தொட்டித் தண்ணீர் சுமக்க ஒருத்தி, |
| 105 | அடுக்களைச் சமையல் ஆக்க ஒருத்தி, அண்டையில் அகலா திருக்க ஒருத்தி, அத்தனை பேர்க்கும் அடிமை யாளாய் ஏழை பாவி யானும் ஒருத்தி. எளியேன் சென்ற நாள்மு லாக |
| 110 | எல்லா வேலையும் என்தலை மேலாம். பெண்டிர் நால்வரும் பென்ஷன் பெற்றனர். பெரிய அக்காள் பெருமாப் பிள்ளை "ஏனடி அம்மா! யான்ஏ காங்கி. உரிய அரிசி உண்டெனில் சோறு; |
| 115 | உழக்குக் குறநொய் உண்டெனில் கஞ்சி; மக்களைப் பெற்ற மகரா சிகள்நீர் உண்ண வேண்டும், உடுக்க வேண்டும்; உழைத்துப் பொருளுண் டாக்க வேண்டும்; எனக்கினி யிங்கே யாதுண் டம்மா?" |
| 120 | என்று பெருமூச் செறிந்து சொல்லி இருந்த இடம்விட்ட டகலவே மாட்டாள், |
| |
|
|