பக்கம் எண் :

238கவிமணியின் கவிதைகள்

Untitled Document

அடுத்த அக்காள், அழுபிள்ளைக் காரி;
அடமும் கொஞ்சம் அதிகம் கொண்டவள்;
அம்மா, மிளிகை அரைஎன் றால்உடன்

125 அவள்கை மதலை அழுவது கேட்டிடும்;
பிள்ளைக் குணமோ, பிடுங்கி வைப்பாளோ,
என்ன மாயமோ, யானேதும் அறியேன்.
மூன்றாம் அக்காள் முழுச்சோம் பேறி.
அன்றியும்,

130 மூன்று மாதமாய் முழுகவு மில்லை;
வாயா லெடுப்பாள் வயாக்கோட் டியினால்;
ஏறின கட்டில் இறங்கவே மாட்டாள்.
இனியோர் அக்காள் எடுப்புக் காரி.
இந்தி ராணியும் ஈடிலை; இவளது

135 மஞ்சள் பூச்சும் மயக்கிடு பேச்சும்
சாந்துப் பொட்டும் தாசிகள் மெட்டும்
கோல உடையும் குலக்கு நடையும்
கொண்டை யழகும் கண்டு, கணவர்
அண்டையி லிருந்தும் அகலவே ஒட்டார்;

140 'தங்கப் பெண்ணே தாராவே!
தட்டான் கண்டால் பொன்என்பான்
தராசிலே வைத்து நிறுஎன்பான்
எங்கும் போகாமல் இங்கே யேயிரு'
என்று சொல்லுவ திவட்கே இசையும்.

145 இவள்,
அடுக்களை வந்திடாள் - அரக்குப் பாவையோ?
கரிக்கலம் கையெடாள் - கனகசுந் தரியோ?
வாருகோ லேந்திடாள் - மகராணி மகளோ? வெயிலில் இறங்கிடாள் - மென்மலர் நொண்டியோ?

150 குடத்தை எடுத்திடாள் - குருடியோ நொண்டியோ?
வஞ்சகி இவள்செய் தலையணை மந்திர
உபதே சங்களை உண்மையென் றெண்ணிக்
கணவன் ஒவ்வொரு காலத் தெங்களைப்

154 படுத்திய பாடெலாம் பகர்வதும் எளிதோ?