பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு241

Untitled Document

3. கேலிப் படலம்

1393   என்மகன் சாமி, ஏதோ ஒருநாள்,
அத்தை மகளென விளையாட் டாகவோ,
வேண்டு மென்றோ, 'வீர லெச்சுமி!
குலுக்கை போலக் குறுகிப் போனாயே!

  220 எருமை போல இளைத்துப் போனாயே!
பனந்தூர் போலப் பாறிப் போனாயே
வயிற்றில் உனக்கு மடிப்புகள் எத்தனை?
இன்னும் சிலநாள் இங்கிருப் பாயேல்,
வாசலும் வேறு மாற்றவே வேண்டும்.

  225 குதிலும் வெளியாய்க் கொஞ்ச நாளாச்சுதே!
பத்தய நெல்லும் பாதி யாச்சுதே!
நீங்களும் வந்து நெடுநா ளாச்சுதே!
இந்த ஆடி முழுதுமிங் கிருந்து
புதுநெல் வரினும் போகமாட் டீரோ?

  230 நல்லது நல்லது, நல்லது அம்மா!
தின்பவ னெல்லாம் தின்பான் போவான்,
திருக்கணங் குடியான் தெண்ட மிறுப்பான்,
அவியல் பொரியல் துவையல் தீயல்
பச்சடி தொவரன் கிச்சடி சட்டினி

  235 சாம்பார் கூட்டுத் தயிர்புளி சேரி
சேனை ஏத்தன் சேர்த்தெரி சேரி
பருப்பு பப்படம் பாயசம் பிரதமன்
பழமிவை யோடு படைப்புப் போட
எத்தனை நாளைக் கெங்களால் ஏலும்?

  240 அரசனும் கூட ஆண்டியா வானே!
இப்படி உண்மை யிருக்க, 'யாவும்
மக்களுக் காக வாரிக் கொடுத்தான்,
கடன்கள் வாங்கினான், கைச்சீட் டெழுதினான்.
ஒற்றி கொடுத்தான்' என்றுன் பெற்றோர்