Untitled Document
| 245 | எங்கள் ஐயாவைத் தூற்றவ தெல்லாம் உணர்வில் லாமல் உளறுவ தல்லவோ? என்று கூறிய மொழிகள் யாவையும் மங்கை கேட்டு, மனம்நொந் தழுது. ஒன்றைப் பத்தாய் பெருக்கி, உடனே |
| 250 | தாய்க்குச் சொன்னாள்; தந்தையும் அறிந்தார்; பையப் பையப் பாட்டியும் அறிந்தாள்; யாவரும் கூடி, என்கண் மணியே 'உனக்கிங் கென்ன உண்டடா பயலே! உடையக் காரியைத் தடைவையோ பயலே? |
| 255 | பத்திர மாயிரு! பழைய காட்டர்க்கு அனுப்பி விடுவேன், அறிநீ பயலே! என்றிப் படிநா எழுந்தது சொல்லி, ஏசி வசைகள் பேசிப் பிரம்பால் ஐயோ! ரத்தம் சிந்த அடித்தனர். |
| 260 | காணா தென்று கண்ணில் மிளகும் இட்டனர், இரக்கம் கெட்டவர் பாவிகள். நடந்ததை யெல்லாம் நன்கறிந் தாலும், யாதும் பேசா திருப்பர்என் கணவர். |
| |
|
|