பக்கம் எண் :

246கவிமணியின் கவிதைகள்

Untitled Document

345   கெஞ்சிக் கெஞ்சிச் சொன்னேன், அம்மா!
கீழே விழுந்துகும் பிட்டேன், அம்மா!
எதற்கும் அவர்கள் இணங்கினா ரில்லை.
எளியேன் செய்யவே றென்னுண் டம்மா!
கூகூ என்ற கூக்குரல் கேட்டுப்

350   பக்கத் துள்ளாளர் பலரும் வந்தனர்.
ஊரார் எல்லாம் ஒன்றாய்க் கூடினர்.
விருந்தின ரெல்லாம் விரலை மூக்கில்
வைத்த படியே மயங்கி நின்றனர்.
முடிவில்,

355   மேலவீட் டண்ணன் வெள்ளையம் பிள்ளை
(நல்ல மனிதர், நடுநிலை யுள்ளவர்,
நாலுகா ரியமும் நன்றாய் அறிந்தவர்,
பட்டுத் தேறிப் பழக்கம் வந்தவர்,
என்ன செய்யலாம்! இறந்துபோ யினரே!)

360   வந்தொரு வாறு வழக்கைத் தீர்த்தார்;
ஒவ்வொரு நாளைக் கொவ்வொரு மனைவி
புருஷன் எச்சில் புசித்திட வேண்டும்;
இடையில்,
தீபா வளியோ, திருக்கார்த் திகையோ,

365   வேறிம் மாதிரி விசேஷ நாளோ
வந்திடு மாகில், வரிசை வரிசையாய்
ஐந்திலை யிட்டவை அனைத்திலும் அமுது
படைத்துப் புருஷன் பருகிய பின்னர்
பரிகலத் துள்ள பதார்த்த மெல்லாம்

370   மனைவியர் சரியாய் வகுத்துண வேண்டும்.
வழக்குகள் ஒன்றும் வரலா காது, எனக்
கூறிப் போயினர்; கூடி யிருந்தோர்
யாவரும், 'இதுவே நீதி' என்றனர்.
என்றவர்

375   கலகமுண் டான காரண மறிந்து
சிரித்து நின்றார், 'சீசீ' யென்றார்