பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு247

Untitled Document
    'எச்சில் இலைக்காய் இந்தக் களரி
கூட்டுவ ரோ?' எனக் கூறிப் போனார்.
ஐயோ!

380   துயரம், துயரம், பிறப்பே துயரம்;
பிறப்பினும் துயரம் பெண்மக ளாதல்;
பெண்மக ளாதலிற் பெரிதும் துயரம்
மருமக் கள்வழி வலையிற் படுதல்;
வலையிற் பட்டு வருந்தலில் துயரம் ஓர்

385   காரண வருக்குக் கழுத்தைக் கொடுத்தல்;
கழுத்தைக் கொடுத்தலில் துயரம் கருணை
இல்லா மாமிக் கிசைய நடத்தல்;
இசைய நடத்தலில் துயரம் என்போல்
பாரக மீதிப் பஞ்சபா விகளில்

390   ஒருத்தி யாக உயிர்பெற் றிருத்தலே!