முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 257 |
Untitled Document | | குசும்பன் சாமியும், குண்டுணிச் சுப்புவும், உன், அப்பனும் கூடிஆலோ சனைகள் | 675 | | செய்த தெல்லாம் தெரியும், தெரியும்! அறிந்த வித்தைகள் அனைத்தையும் அவரைக் காட்டச் சொல்போ, காட்டச் சொல்போ! கோர்டில் வியாச்சியம் கொடுக்கச் சொல்போ! 'செருப்பா லடித்தா செலவுக்கு வாங்குவார்?' | 680 | | வாங்கட்டும், வாங்கட்டும்! வட்டி முடையட்டும்! நாஞ்சி னாட்டுக்கு நன்மையுண் டாகட்டும்! இனியுள்ள காலம் எக்கா ரணவனும் காடும் மேடும் கரையும் சுற்றி, ஊணும் உறக்கமும் இன்றி உழைத்து, | 685 | | விளையும் விளைவெலாம் வீசித் தூற்றி, ஈரமும் பதரும் இல்லா தகற்றி, சாக்கில் அளந்து தலையில் எடுத்து, மாதா மாதம் மருமகன் ராஜா திருவுளங் கொண்டெழுந் தருளி யிருக்கும் | 690 | | கொட்டா ரத்தில் கொண்டு சென்று, அவர், குறட்டைச் சுருதியில் கும்ப கர்ணப் படலம் அன்பாய்ப் பாரா யணம்செயும் காலமா யிருந்தால் காத்து நின்று, அல்லது, | 695 | | நடுமனை கீறி, 'நாயும் புலியும்' இஷ்டர்கள் கூட இருந்தி ழுக்கும் வேளையா யிருந்தால் விலகி நின்று, அல்லது, புகையிலை வாயிற் போட்டுக் கொண்டு பொடியும் மூக்கில் ஏற்றிக் கொண்டு | 700 | | 'இறக்கு, வெட்டு' என இரைந்து கொண்டு இடையிடைச் சண்டையும் எழுப்பிக் கொண்டு பக்க மந்திரிகள் பலரொடும் சீட்டுக் கச்சேரி செய்யும் காலமா யிருந்தால் ஓரிடம் மாறி ஒதுங்கி நின்று, |
| |
|
|