Untitled Document 640 | | சீடைக் காகச் சிலேட்டுப் பயணம், முறுக்குக் காக மோதிரம் பணயம், காப்பிக் காகக் கடுக்கன் பணயம், 'காலரு'க்காகக் காறை பணயம், கூத்துக் காகக் குடையும் பணயம், | 645 | | இப்படி யாக, எல்லாப் பணயம், வைத்துத் தின்னும் வயிற்றுக் கள்வர் வாழ்ந்திடு வாரோ? வாழ்ந்திடு வாரோ? முருக்கத் தடிபோல் வளர்ந்தமுட் டாளே! நீ, பணயம் வைத்த பண்டம் அனைத்தும் | 650 | | எத்தனை தரம்நான் மீட்டி யெடுத்துத் தந்தேன், அப்பா! தந்தேன், அப்பா! அடே, ஆறு வருஷமாய் ஐக்கோர்ட் வரையும் வழக்குப் பேசிஎன் மாமனா ருக்குப் | 655 | | பணம் கடன் கொடுத்த பயல்களை எல்லாம் பஞ்சாய்ப் பறத்தின பாதர் சிங்கமாம் என்னையும் குடும்ப தோஷி என்றுநீ சொல்ல வந்தாயே! சொல்ல வந்தாயே! விலைக்கு விற்ற விளையை மைனர் | 660 | | வியாச்சியம் செய்து, மீட்டினது உன்தன் அப்பனா? நானா? ஆரடா? சொல்லு, அன்பாய்ப் பேசும்உன் அப்பனால் உனக்கு அரைக்கா சுக்கோர் ஆதாய முண்டோ? மூத்த | 665 | | காரணவர் பெற்ற கன்றுகள் கூடி ஆயிரம் ரூபாய்க்கு ஆவ லாதி வைத்ததை நீயும் மறந்தா யோடா? அந்த உகந்துடை மைப்பணம் ஒன்றும் அவருக்கு | 670 | | இல்லா தாக்க என்னபா டெல்லாம் பட்டேன் அப்பா! பார்த்தது மில்லையோ? |
| |
|
|