முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 261 |
Untitled Document | | உன்மகன் சாமி ஒழுங்குகள் எல்லாம் யான்அறி யேன்என் றிருந்தா யோடா? அவன், | 785 | | பரத்தை நாடிப் பௌரணை தோறும் கன்னிப் பதிக்குப் போகும் காரணம் பக்தியின் மிகுதியோ? பணத்தின் மிகுதியோ? உண்டு கொழுத்த உரத்தின் மிகுதியோ? உண்மை யறிய உனக்கு முடியுமோ? | 790 | | கள்ளுக் குடிக்கிற காரிய மெல்லாம் மந்தா ரம்புதூர் மதுவிளை நாடான் கிட்டின முத்துவைக் கேட்டால் தெரியும். நான்சொன் னால்நீ நம்புவை யோடா? பள்ளியில் உன்மகன் படித்துப் பெரிய | 795 | | பரீக்ஷையம் கொடுத்துப் பட்டமும் பெற்று ஒரு மாதவ ராயராய் வரட்டும், அப்பா! நாடும் நகரும் நடுங்கட்டும், அப்பா! அழகு! அழகு! அதிசயம்! அதிசயம்! பெற்ற புத்திரன் பெரும்பிழை செய்யினும் | 800 | | சிறுவன் செய்த சிறுபிழை என்பாய், சினந்திட மாட்டாய், சிரித்து விடுவாய். ஏசினும் பேசினும் எட்டி யடிப்பினும் வாய் மறுத்தரை செய்யாய், பொறுத்துக் கொள்வாய் 'மக்கள்மெய் தீண்டலுடற் கின்பம் மற்றவர் | 805 | | சொற்கேட்டல் இன்பம் செவிக் 'கெனச் சொல்லும் உண்மைக் குறளின் உட்பொருள் அறிந்து நடப்பவர் உன்போல் நானிலத் தில்லை! ஆனால், மருமகன் வந்து வணங்கி நின்று | 810 | | வாழ்த்த எண்ணி வாயைத் திறக்குமுன், வைதான் என்று பொய்தான் சொல்வாய்! அடியேன் என்று அவன் அங்கை கூப்பினும், அடித்தான் என்று அநியாயமே கூறுவாய், காரண வா! உன் காரிய மெல்லாம் |
| |
|
|