பக்கம் எண் :

260கவிமணியின் கவிதைகள்

Untitled Document
8. வாழ்த்துப் படலம்
1398 ...இக்கொடு மொழிகளாம்
கருதற் கரிய கருடாஸ் திரங்கள்
பலவும் நெஞ்சிற் பாய, மருமகன்

755 புண்பட் டுள்ளம் பொறுக்க முடியாது,
ஐயோ! என்றுகண் ணீர்விட்டு அழுது,
தந்தை தாயார் தம்மிடம் சென்று
விளைந்த எல்லாம் விரிவா யுரைத்தான்;
கோபம் பொங்கிக் கொதித்து வரும்படி

760 சிற்சில இடையிடை சேர்த்தும் கொண்டான்.
செப்பிய சொற்கள் தீயிற் காய்ச்சிய
கம்பிகள் போல்இரு காதும் நுழைந்திட,
வீரு பத்திரப் பிள்ளை வெகுண்டு,
கால்நிமி ஷத்தில்என் கணவரைக் கண்டு,

765 "அடடா மூடா! அதர்மசண் டாளா!
வஞ்சகா! கொடிய மறவா! குறவா!
நெஞ்சில் இரக்கம் இல்லா நீசா!
மடையா! நீயென் மகனை நோக்கி
ஊத்தை வாயால் உளறின மொழிகளை

770 இன்னும் ஒருமுறை என்முன் வந்து
சொல்லடா பார்ப்போம், சொல்லடா பார்ப்போம்
பள்ளிப் பையனை, பதினா றாண்டு
திகையாப் பாலனை, தெரியாச் சிறுவனை,
கன்னியும் காப்பும் காணாக் குமரனை,

775 கள்ளன் என்றும் கபடன் என்றும்,
கள்ளை யுண்டு களிப்பவன் என்றும்,
தடியன் என்றும் மடியன் என்றும்,
தாசிகள் வீட்டுத் தானிகன் என்றும்,
பழித்துப் பேசிய பாதகா! உன்தன்

780 நாவை யரிந்து நாய்முன் எறிந்தா
லன்றி என்சினம் ஆறாதே, அடா!