பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு275

Untitled Document

    சந்தேக மில்லை, சந்தேக மில்லை;
நீர்
அண்டப் புரட்டனை அறிய மாட்டீர்;

1230   புத்தியில் பெரியவர், பொல்லாத வம்பர்;
ஆளும் தரமும் அறிந்திட வல்லவர்,
சீரும் திறமும் தெரிந்திடச் சமர்த்தர்;
ஆடிக் கறப்பதை ஆடிக் கறப்பார்;
பாடிக் கறப்பதைப் பாடிக் கறப்பார்;

1235   தயவாய்ச் சொல்லுவார், தக்கில் கேட்பார்,
இரைந்து சொல்வார், எச்சில் எழும்புவார்;
பார் பார் என்பார், பல்லைக் கடிப்பார்;
போருக்கு நிற்பார், புலிபோல் பாய்வார்;
அங்கும் இங்கும் அசையாதே என்பார்,

1240   குனியாதே என்பார், கோட்டைப்பார் என்பார்,
கோட்டையும் கூடக் கூட்டாக் காமல்
கேள்விகள் பலவும் கேட்க வருவார்.
'ஓடும் குதிரைக்கு உச்சியில் கொம்புகள்
ஒன்றா? இரண்டா? உடன் சொலும்' என்பார்;

1245   நாம்,
குதிரைக்கு ஏது கொம்புகள் என்றால்
அது,
கோர்ட்டு அலட்சியக் குற்றம் என்பார்!
'கேள்வியை நன்றாய்க் கேட்டுச் சொல்லும்;

1250   இரண்டா? ஒன்றா? என்பது என் கேள்வி;
உண்டா? இல்லையா? என்றுநான் உம்மிடம்
கேட்டேனா? ஓய்? காதுகேட் காதோ?'
என்றெல்லாம் சொல்லி ஏமாற்றி விடுவார்,
குண்டில் விழுந்த குள்ள நரியைப்

1255   படுத்தும் பாடெல்லாம் உம்மைப் படுத்துவார்,
இவர்,
ஈரங் கிகளை எடுத்துச் சொன்னால்
பீரங் கிகளும் பின்னிட் டோடும்;
பொல்லா தவர் அவர், பொல்லா தவர் அவர்.