பக்கம் எண் :

276கவிமணியின் கவிதைகள்

Untitled Document

1260   இந்த வக்கீலுக்கு ஏழரை நாட்டனும்
இணையா வாரோ? இணையா வாரோ?
அறிந்து பிழையும், அறிந்து பிழையும்
சொந்த வீட்டில் துரும்பையும் தூக்கி
எறியச் சற்றும் இயலாது என்பவர்,

1265   வக்கீல் வீட்டில் வரிக்கல் பிடுங்கப்
போவதும் எத்தனை புத்திகேடு, ஐயா!
தங்கை மக்கள் தரித்திரம் அடைந்து
வயிற்றுக்கு இன்றி வாடி யலைய,
வருக்கை மாம்பழம் வாழைப் பழமும்

1270   பெட்டிப்பா லும் பிஸ்கூத் துகளும்,
ஊரார் மக்கள் உண்டு களித்திட
வாங்கிச் செல்வது மதியுளார் செயலோ?
மேடும் காடும் வெட்டித் திருத்திப்
பாறையும் உடைத்துப் படுநில மாக்கிப்

1275   பருவம் அறிந்து பண்பட உழுது
மண்ணலம் உணர்ந்து வளமிகப் பெய்து,
வாசிறை மீண்டான் வளரச் செய்து,
சம்பாப் பயிரைத் தழைக்கச் செய்து
காலா காலத்தில் களைகள் எடுத்து

1280   வேலியைக் கட்டி விலங்கினம் விலக்கிப்
பறைகளைக் கெட்டிப் பறவையை ஓட்டி,
நீரும் பாயச்சி, நிதமும் இராப்பகல்
உறக்க மின்றி உழைப்பத னாலே
விளையச் செய்த மேனிநெல் எல்லாம்,

1285   வக்கீல் வீட்டு வாயிலிற் கொண்டுபோய்
விரித்துக் காய்ச்சி வீசித் தூற்றி
அளந்து வாரி அறைக்குட் போட்டு
வெறுங்கை யோடு வீடு போய் சேரும்
நம்மவர் போல் இந்நானிலத் தொங்கும்

1290   ஒருவ ரேனும் உண்டோ? ஐயா!
மூச்சை யடக்கி முக்குளி போட்டுக்