முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 277 |
Untitled Document | | கீழுலகம் போய்க் கிடைத்த சிப்பியை வாரி யெடுத்துமேலே வந்திடும் முழுக்கா ளியினிடம் முத்தொன் றேனும் | 1295 | | இருப்பதும் உண்டோ? எண்ணிப் பாரும்! படிப்பிலார் தேடும் பற்பல பொருளும் படித்தவர் வீட்டையே பார்த்துச் செல்லும்; மூடர் முதலெலாம் வக்கீல் முதலாம், ஐயம் இதற்கிலை, ஐயம் இதற்கிலை, | 1300 | | ஐயா! ராஜி ஆவதே உத்தமம்! ஐயா! ராஜி ஆவதே உத்தமம்! மருமக் கள்வழி வழங்கும்இந் நாட்டில் வீடுவீ டாயொரு கோடிருந்தாலும் வழக்குகட்கு ஓய்வு வருமோ ஐயா?" | 1305 | | என்று இவை யெல்லாம் எடுத்துச் சொல்லி இறங்கிப் போனர். இக்கதை யெல்லாம் நாலாம் மனைவி நாடகக் காரியின் மாமன் மகன் ஒரு வக்கீல் குமஸ்தன் அறிந்து வந்தான். "அண்ணே! அந்த | 1310 | | வெள்ளையம் பிள்ளைக்கு வேலை யில்லை; காடு கூப்பிடுது காலம் வரவில்லை; வீடு போக்கிடுது, வேளைவ ரவில்லை? கூனக் கிழவன் கோர்ட்டு வழக்கில் என்ன அறிவான்? அவன்பேச் சையும் ஒரு | 1315 | | காரிய மாகக் கருதிட லாமோ? செல்வமும் கல்வியும் செழித்த நாட்டில், வியாபா ரங்கள் மிகுந்த நாட்டில், உழைப்புகள் பற்பல ஓங்கிய நாட்டில், வழக்குகள் நிதமும் வள்வாந்து வருவது | 1320 | | சகஜம் என்று ஸ்தாபித்திட நான் 'அத்தா ரிட்டிகள்' ஆயிரம் காட்டுவேன் அண்டப் புரட்டன் வக்கீல், என்ன ஆளைத் தூக்கி விழுங்கிடு வாரோ? இவர்வீச் செல்லாம் யாரிடம் செல்லும்? |
| |
|
|