Untitled Document 1325 | | ஏழை, பாவம், யாவ ரேனும் வந்தால், கொஞ்சம் வாலை முறுக்குவார்; அன்றி, பதிவு சாக்ஷிப் பலவேசம் பிள்ளை கூட்டாளிகளைக் கூட்டிற் கண்டால், | 1330 | | வாயைத் திறவார், மௌனம் கொள்வார்; பேடியைக் கண்ட பீஷ்மரும் ஆவார்; அண்டமம் கோழி அண்டமாய் விடும்; உருட்டும் புரட்டும் ஒழிந்து போய்விடும்; அண்ணன் எதற்கும் அஞ்ச வேண்டாம்; | 1335 | | எதுவந் தாலும் யான்இருக் கின்றேன்; என்னை, அண்ணன் நன்றாய் அறிய மாட்டீர், இந்து லாவில் எழுத்துக்கள் இத்தனை, மகம்மத லாவில் வரிகள் இத்தனை | 1340 | | என்று சொல்ல எனக்குத் தெரியும், தி.பி.கோ.வைத் திருப்பித் திருப்பிப் பாரா இரவும் பகலும் இல்லை. சுருக்கி உம்மிடம் சொன்னால் போதுமே! சட்ட மெனக்குத் தலைகீழாய்த் தெரியும்; | 1345 | | நடைபடி யெல்லாம் நன்றாய் தெரியும்; இரண்டு கையால் எழுதத் தெரியும்; அரை நிமிஷத்தில் அநியா யங்கள் ஐம்பதைக் கோர்ட்டில் ஆக்கத் தெரியும்; பட்டிகை எழுதப் பாராம் போடக் | 1350 | | கெட்டி கெட்டி என்றுபேர் கேட்ட ஏட்டுக் குமஸ்தன் யானே யாவேன். சாடை காட்டிச் சாட்சிக ளுக்குத் தெரியாக் காரியம் தெரியச் செய்ய என்னைப் போல் இங்கு யாருண்டு? ஐயா! | 1355 | | கட்சிகள் வந்து என் கையில் தந்த பணத்தைச் சொந்தப் பணம்போல் எண்ணி |
| |
|
|